எல்லோருக்கும் பொதுவிதியான மரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்! ஊடகப்பிரிவு- பன்னூலாசிரியர் நூறுல்ஹக் அவர்கள் இறையடி சேர்ந்த செய்தியால், கடும் கவலையடைந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அன்னாரின் மறைவு குறித்து அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "எழுத்துப் பணியில் ஓயாது உழைத்துக் கொண்டிருந்த ஒரு நண்பனை நான் இழந்துவிட்டேன். அவரது இடைவௌியால், முஸ்லிம் சமூகத்தின் தனிப்பெரும் திறமையில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது. அரசியல், சமூகவியல், இலக்கிய வௌிகளில் மர்ஹூம் நூறுல்ஹக்கின் ஆளுமைகள் பளிச்சிடுவதை அன்னாரின் படைப்புக்களில் பார்க்க முடியும். முஸ்லிம் பூர்வீகம் பற்றி மிகத் தௌிந்த சிந்தனைகளில் அவர் பணியாற்றியவர். சமூக, அரசியல் தலைமைகளை வழிகாட்டும் அளவுக்கு அவரது சிந்தனைகள் இருந்ததை என்னால் பெருமையுடன் ஏற்றுக்கொள்ள முடியும். கொழும்புக்கு வரும் நேரமெல்லாம் நேரடியாகவோ அல்லது தொலைபேசியிலோ என்னைத் தொடர்புகொள்ளும் அவர், முஸ்லிம் சமூகத்தின் சமகால, நிகழ்கா
கொழும்பு- சிலாபம் ஏ3 வீதியில் அமைந்துள்ள மாதம்பை முஸ்லிம் கிராமத்தில் தனியார் தேவாலையொன்றுக்கு முஸ்லிம்களின் காணிகளை கபளீகரமாக புனித பூமியாக பிரகடனப்படுத்த தனிநபரொருவர் முயற்சித்து வருவதற்கெதிராக பிரதேசவாசிகள் நேற்று ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
முஸ்லிம்கள் 5 பரம்பரைகளுக்கும் மேலாக வாழ்ந்து வருகின்ற இப்பிரதேசத்தை தனிவெல்ல தேவாலைக்கு சொந்தமான புனித பூமியாக பிரகடனப்படுத்தும் நோக்கில் நேற்று காணிகளை அளக்க முற்பட்டபோதே 500க்கும் மேற்பட்ட பிரதேச மக்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
ஐயனார் தமிழ் கோயிலை தனிவெல்ல தேவாலையாக மாற்றி, கீர்த்தி சேனாநாயக்க என்பவர் பரிபாலனம் செய்து வருவதாகவும், தேவாலைக்கு எதிரேயுள்ள ஒரு ஏக்கர் அளவிளான காணியில் அமைந்துள்ள 27க்கு மேற்பட்ட முஸ்லிம் வீடுகள், 12 கடைகளை உடைந்து புனித பூமியாக பிரகடனப்படுத்த முயற்சித்து வருவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
16வருடங்களுக்கு முன்னர் இந்த பிரதேசத்தை புனித பூமியாக வர்த்தமாணி மூலம் பதிவுசெய்ய முயற்சித்துள்ளதாகவும், இதுவரையில் மக்களுக்கு எவ்வித முன்னறிவித்தலும் இன்றி காணிகளை அளக்க முற்படுவதாகவும், தம்மிடம் 1800ஆம் ஆண்டுக்கு முன்னர் வசித்த பத்திரங்கள் இருப்பதாகவும் பிரதேசவாசி எம்.ஏ.ரி.அமீர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பாக மாதம்பை பள்ளிவாசல் பரிபாலன சபை உறுப்பினர் நுஸ்ரத் மஹ்ரூபிடம் வினவியபோது,
இது தனியொருவர் முன்னின்று சுய இலாபங்களை நோக்காகக் கொண்டு செயற்படுத்த முற்படும் ஒரு திட்டமாகும். இது தொடர்பாக பள்ளிவாசல் முஸ்லிம் அரசியல் பிரமுகர்களின் கவனத்துக்கு கொண்டுவர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அத்தோடு இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் பாதிக்காத வகையில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளவும் வழிகாட்டியுள்ளோம். இந்த நடவடிக்கைக்கு பாதிக்கப்பட்டவர்களை முன்னிறுத்தி சட்ட நடவடிக்கைகளுக்கு செல்ல வழிகாட்டியுள்ளோம். ஆர்,ஆர்,ரி. சட்டத்தரணி சிராஸ் நூர்தீனிடம் சட்ட ஆலோசனைகளையும் பெற்று வருகின்றோம்.
இதுதொடர்பாக சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீனைத் தொடர்புகொண்டு கேட்டபோது,
பிரதேசவாசிகளிடம் தாம் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வருகின்றமைக்கான ஆதாரங்களை வைத்துள்ளனர். புனித பூமியாக ஏற்கனவே 1970களில் பிரகடனப்படுத்த முயற்சித்தும் அது பூரணமாகியிருக்கவில்லை. அதனை மீண்டும் புதுப்பிக்க தேவாலய முயற்சித்து வருகின்றது. வர்த்தமாணி வெளியாகாமல் சட்ட நடவடிக்கைகளுக்கு செல்லவும் முடியாது- என்றார்.
மேலும், தேவாலயத்தை சூழ உள்ள ஏனைய மூன்று பிரதேசங்களிலும் சிங்கள மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அப்பிரதேசங்கள் புனித பூமியாக பிரகடனப்படுத்த முயற்சிக்கவில்லை. புனித பூமியாக பிரகடனப்படுத்த முயற்சிக்கும் வீடுகளுக்கிடையே உள்ள சிங்கள வீடுகளுக்கு எவ்வித பாதிப்புமில்லை. முஸ்லிம்களை மாத்திரமே புனித பூமி என்ற போர்வையில் இந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்த முயற்சிப்பதாகவும் பிரதேசவாசி எம்.ஏ.ரி.அமீர் தெரிவித்தார்.
இந்த தேவாலயம் இலங்கையில் கூறுதலாக வருமானமீட்டும் முதல்தர தேவாலைகளில் ஒன்றாகும். இந்த திட்டத்தின் பின்னணியில் ஒரு தனிநபரின் சுய நலமும் வியாபார நோக்கமும் இருப்பதாக தெரியவருகின்றது. தேவாலயத்தின் திட்டத்தின்படி, 27 முஸ்லிம் குடும்பங்கள் வசிக்கும் இடத்தில் வியாபார நிலையம், வாகன தரிப்பிடம், தாதுகோபுரம் என்பன அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று 500க்கும் மேற்பட்ட பிரதேசவாசிகள் ஆர்ப்பாட்டம் செய்ததைத் தொடர்ந்து எதிர்வரும் வெள்ளியன்று அனைவரும் ஜும்ஆ தொழுகைக்காக பள்ளிசென்ற பின்னர் காணியை அளக்கப்போவதாகவும் கூறிவிட்டுச் சென்றுள்ளனர்.
Comments
Post a comment