தனியார்
தொலைக்காட்சி ஒன்றின் அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் முன்னுக்குப் பின் முரணாக உளரிய ஹுனைஸ் பாரூக்.
முன்னாள்
அரசியல் கூத்தாடியான ஊடகவியலாளர் ஒருவரினால் தனியார் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் நடாத்தப்பட்டு வரும் அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை கலந்து கொண்ட வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாருக் முன்னுக்குப் பின்னான கருத்துக்களைக் கூறி நேயர்களிடம் வகையாக மாட்டிக் கொண்டார்.
மகிந்த
ராஜபக்சவின் அரசில் முஸ்லிம்களுக்கெதிரன அட்டூழியங்களை தாங்க முடியாதே தான் அந்த அரசிலிருந்து வெளியேறி மைத்திரி – ரணில் நல்லாட்சியை “தவக்கல்து அல்லாஹ்” எனக்கூறி உயிரையும் பொருட்படுத்தாது ஆதரிக்க ஓடோடி வந்ததாக கூறினார். இவ்வாறு கூறி சிறிது நேரத்தின் பின்னர் இன்னொரு கட்டத்தில் மைத்திரியின் சம்மதத்துடன் ரணிலுடன் பேசி தனக்கு கபினட் அமைச்சர் பதவி ஒன்று தருவதாகவும் வன்னி மாவட்ட பிரமுகர்கள் ஐவருக்கு திணைக்களங்களிலும் கூட்டுத்தாபனங்களிலும் தலைவர் பதவி தருவதாக மைத்திரியும் ரணிலும் வாக்குறுதி அளித்ததாலேயே தான் மைத்திரியை ஆதரித்ததாகவும் தெரிவித்தார்.
தேர்தல்
காலத்தில் தங்களால் உருவாக்கப்பட்ட முஸ்லிம் கூட்டமைப்பு என்ற கட்சியுடன் இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு செயலாளர் நாயகம் சுசில் பிரேம ஜயந்தவுடன் ஒப்பந்தமொன்றை செய்ததாகவும் அவர் கூறினார். வேண்டுமென்றால் இதற்கான ஆவணங்களை வெளிப்படுத்துவதற்கு தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.
”அல்லாஹ் – ரஸூல் – சமூகம்” என்று அடிக்கடி கூறிவரும் ஹுனைஸ் பாரூக்கின் இரட்டை நாக்கு இன்று எல்லோருக்கும் புரிந்து விட்டது.
இந்த
நிகழ்ச்சியை தயாரித்து வழங்கும் அரசியல் கூத்தாடிக்கு ரிஷாட் பதியுதீன் என்றால் வேப்பங்காய்.
Abdul Reza
Post a Comment