அடிப்படைவாதம் (Fundamentalism) என்பது வழக்கமாக சமயம் சார்ந்த நம்பிக்கைகளின் மீது வைக்கும் அசைவிலாத பற்றுறுதியைக் குறிக்கும். [1] என்றாலும், இது சில சமயக் குழுக்களின் விவிலிய இலக்கியத்தைக் கண்டிப்பாக கடைபிடிக்கும் போக்கை, அதாவது அதில் குறிப்பிட்டுள்ள வேதாகம உரைகளையும் வறட்டுவாய்பாடுகளையும் கருத்தியல்களையும் பின்பற்றும் நடைமுறைப் போக்கையும் அதன் உட்குழு புறக்குழு பாகுபாட்டை பற்றிகொண்டு ஒழுகுதலையும் குறிக்கிறது. [2] [3] [4] [5] இது குறிப்பிட்ட சமய உறுப்பினர்கள் பிறழ்ந்த ஒழுக்கத்தைப் பின்பற்றும்போது, தூய்மைவாத நிலையில் முந்தைய கருத்தியல்களுக்கு மீட்பதில் உறுதிப்பாட்டையும் விருப்பார்வத்தையும் முன்வைக்கும் போக்காகும். இதனால், இந்நிறுவப்பட்ட மறைசார் அடிப்படைகளில் நின்று, இவ்வடிப்படைகள் சார்ந்தெழும் பன்முகக் கருத்துகளைப் புறந்தள்ளிவிட்டு குழுவுள்ளே அனைவராலும் ஏற்கப்பட்ட பொது கருத்தேற்பாக அடிப்படைவாதம் உருவாக்குகிறது. [6] சூழலைச் சார்ந்து, அடிப்படைவாதம் ஒருபுறம் சாய்வதாக அல்லது கோடியதாக அமையுமே ஒழிய நொதுமல்/பொதுநிலையை ஏற்பதில்லை. இது, இடதுசாரி, வலதுசாரி அரசியல் கண்ணோட்டங்களைச் சில
கொண்டச்சி கிராம மக்களுக்கு, அமைச்சர் றிசாத் தனது சொந்த முயற்சியில் 140 வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்க ஏற்பாடு
இந்திய
வீடமைப்புத் திட்டத்தில் பாரபட்சம் காட்டப்பட்ட கொண்டச்சி மக்களுக்கு றிசாத்தின்
உதவியில் வீடுகள் நிர்மாணிப்பு
இந்திய
வீடமைப்புத் திட்டத்தில் முழுமையாக பாரபட்சம் காட்டப்பட்ட கொண்டச்சி கிராம
மக்களுக்கு, அமைச்சர் றிசாத் தனது
சொந்த முயற்சியில் 140 வீடுகளை நிர்மாணித்துக்
கொடுக்க ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார்.
1990ஆம் ஆண்டு
மன்னார் கொண்டச்சியிலிருந்து வெளியேறி, புத்தளத்தில் அகதிகளாக வாழ்ந்து வந்த இந்த
முஸ்லிம் மக்கள், சமாதானம் ஏற்பட்ட பின்னர் மீண்டும் தமது சொந்த இடங்களுக்குத்
திரும்பினர். தாம் வாழ்ந்த பூர்வீக கிராமங்களில் வளர்ந்திருந்த காடுகளைத்
துப்புரவாக்கி, மீண்டும் அந்த இடத்தில் கொட்டில்களை அமைத்து வாழ்ந்து வந்தனர்.
இந்த மக்களுக்கே தற்போது 140 வீடுகளை
அமைச்சர் றிசாத் வழங்கியுள்ளார், வீட்டு நிர்மாணப் பணிகள் முடிவடையும் நிலையில்
உள்ளன. அத்துடன் சிலாவத்துறை – முசலியில் மீள்குடியேறியுள்ள மக்கள் எதிர்நோக்கும்
பொதுவான பிரச்சினையான நீர்ப் பிரச்சினை கொண்டச்சி கிராம மக்களையும் விட்டபாடில்லை.
இவர்களுக்கான தற்காலிக குடிநீர்த் தேவை அமைச்சரினால் மேற்கொள்ளப்பட்டுள்ள போதும்,
நிரந்தர குடிநீர் பெறுவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அத்துடன்
மின்சாரம் பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகளிலும் அமைச்சர் றிசாத் ஈடுபட்டு
வருகின்றார். பாதைப் புனரமைப்பு நடவடிக்கைகளுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கொண்டச்சி,
சிலாவத்துறை, கரடிக்குளி, மறிச்சுக்கட்டி பிரதேசங்களில் முஸ்லிம்கள் வாழ்ந்த
பூர்வீகக் கிராமங்களில் அந்த மக்கள் மீளக்குடியேறும் போதே, வில்பத்துக் காட்டை
முஸ்லிம்கள் அழிக்கின்றார்கள், றிசாத் இதற்கு துணை செய்கின்றார் என இனவாதிகள்
கூச்சலிட்டு வருகின்றனர்.
மீள்குடியேற்றம்
தொடர்பில் அமைச்சர் றிசாத்துக்கு எதிராக இனவாதச் சூழலியலாளர்களும், பேரினவாதிகளும்
இணைந்து ஆறு வழக்குகளை நீதி மன்றத்தில் தொடுத்திருக்கின்றனர். இத்தனைக்கும்
மத்தியிலே அமைச்சர் றிசாத் தனது பணிகளை முன்னெடுத்து வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.
Comments
Post a comment