ஏப்ரல் 21 தாக்குதலுக்கு அப்போது ஆட்சியில் இருந்த அரசாங்கமும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுமே பொறுப்புக்கூற வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வலியுறுத்திக் கூறினார். கிராமத்துடன் கலந்துரையாடல் வேலைத்திட்டத்தின் மற்றொரு கட்டம் குருணாகல் – கிரிபாவ, வேரகலவில் இன்று நடைபெற்றது. இதன்போது, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான ஜனாபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஜனாதிபதி கருத்துக் கூறினார். பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படாததால், அவ்வாறான நிலை ஏற்பட்டமை ஆணைக்குழுவின் அறிக்கையில் தௌிவாவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இலங்கையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஐ.எஸ் ஆதரவாளர்கள் இருப்பதுடன், ஐ.எஸ் தெற்காசியாவில் காட்டுத் தீ போல் பரவுவதாகவும் முற்போக்காக இருப்பதை விட செயற்திறன் மிக்கதாக இருக்க வேண்டும் எனவும் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், இன மற்றும் மத முரண்பாட்டை தூண்டுவதனை தடுப்பதற்கு சட்ட வரையறை தயாரிக்கப்பட வேண்டியதன் தேவையும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறினார். எனினும், துரதிர்ஷ்டவசமாக பிரதமர் விக்ரமசிங்க உள்ள
இனப்பிரச்சினைக்கான தீர்வு மேசையில் ஹக்கீமும் இருப்பது முஸ்லிம்களுக்கு குறிப்பாக வடக்கு கிழக்கு முஸ்லிம்களுக்கு பாரிய ஆபத்தானதாகும் என முஸ்லிம் உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் தெரிவித்தார். கட்சிக்காரியாலயத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
ரஊப் ஹக்கீம் என்பவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமை பதவியை ஏற்றதிலிருந்து இந்த 16 வருடங்களுள் முஸ்லிம் சமூகம் எந்தவொரு உரிமையையும் பெறவில்லை என்பதுடன் குறிப்பிடத்தக்க சேவையையும் பெறவில்லை. அதற்கு மாறாக முஸ்லிம் சமூகம் தனக்கென இருந்த பல உரிமைகளை இழந்;ததுதான் கண்ட மிச்சமாகும்.
இனப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்தை 2002ம் ஆண்டு ஒஸ்லோவில் ஆரம்பித்த போது அப்போதைய பாராளுமன்றத்தில் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் 12 பேர் இருந்தனர். அன்றைய அரசாங்கத்தை நிலைநிறுத்திய அச்சாணியாக மு. கா இருந்தது. அத்தகைய நல்ல சந்தர்ப்பத்தில் நடைபெற்ற இனப்பிரச்சினை தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளின் போது அரச தரப்பாக அன்றி முஸ்லிம் தரப்பாக கலந்து கொள்ளும்படி நான் அமைச்சர் ஹக்கீமுக்கு பல கடிதங்கள் எழுதினேன்.
ஹக்கீம் அதனை ஏற்று முஸ்லிம் தரப்பாக அன்று கலந்து கொண்டிருந்தால் இன்று முஸ்லிம்களும் இனப்பிரச்சினைக்கான தீர்வில் ஏற்கப்பட்ட மூன்றாவது தரப்பாக இருந்திருப்பதோடு சர்வதேச அங்கீகாரத்தையும் பெற்றிருக்கும். அத்தகைய நல்லதொரு சந்தர்ப்பத்தை வேண்டுமென்றே தவறவிட்டு விட்டு, தான் அரச தரப்பாகவே கலந்து கொள்ளப்போகிறேன் என மடத்தனமாக கூறியவர்தான் ஹக்கீம்.
அதன் காரணமாக அந்த வேளையில் காத்தான்குடியில் நடைபெற்ற கிழக்கு மாகாண உலமாக்களுக்கான கூட்டத்தில் ஹக்கீம் முஸ்லிம் சமூகத்தின் துரோகி என நான் பகிரங்க மேடையில் கூறினேன். அன்று நான் கூறியதை ஏற்காத மௌலவிமார் இன்று எனது கருத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டு வருகிறார்கள். எனது அக்கருத்து இன்று வரையான அனைத்து ஹக்கீமின் செயற்பாட்டிலும் உண்மையாகி வருவதை நடுநிலையாளர்கள் காணலாம்.
ஆகவே ஹக்கீம் இனப்பிரச்சினைக்கான தீர்வு மேசையில் இருப்பது முஸ்லிம்களுக்கு நியாயமான தீர்வை தருவதற்கு பதிலாக ஆபத்தையே தரும் என்பதை எச்சரிக்கிறோம். இனப்பிரச்சினைக்கான தீர்வு பேச்சில் நிச்சயம் ஹக்கீம்; வடக்கு கிழக்கு இணைப்புக்கு கை தூக்கி முஸ்லிம் சமூகத்தை ஆபத்தில் தள்ளுவார். ஆகவே அவரை இனப்பிரச்சினைக்கான தீர்வு மேசையிலிருந்து நீக்க வேண்டும் என கிழக்கு புத்திஜீவிகள் குரல் எழுப்ப வேண்டுமென உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது.
Comments
Post a comment