ஏப்ரல் 21 தாக்குதலுக்கு அப்போது ஆட்சியில் இருந்த அரசாங்கமும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுமே பொறுப்புக்கூற வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வலியுறுத்திக் கூறினார். கிராமத்துடன் கலந்துரையாடல் வேலைத்திட்டத்தின் மற்றொரு கட்டம் குருணாகல் – கிரிபாவ, வேரகலவில் இன்று நடைபெற்றது. இதன்போது, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான ஜனாபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஜனாதிபதி கருத்துக் கூறினார். பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படாததால், அவ்வாறான நிலை ஏற்பட்டமை ஆணைக்குழுவின் அறிக்கையில் தௌிவாவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இலங்கையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஐ.எஸ் ஆதரவாளர்கள் இருப்பதுடன், ஐ.எஸ் தெற்காசியாவில் காட்டுத் தீ போல் பரவுவதாகவும் முற்போக்காக இருப்பதை விட செயற்திறன் மிக்கதாக இருக்க வேண்டும் எனவும் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், இன மற்றும் மத முரண்பாட்டை தூண்டுவதனை தடுப்பதற்கு சட்ட வரையறை தயாரிக்கப்பட வேண்டியதன் தேவையும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறினார். எனினும், துரதிர்ஷ்டவசமாக பிரதமர் விக்ரமசிங்க உள்ள
வடக்கு கிழக்கு மாகாணங்களில் அமைக்கப்படவுள்ள 65 ஆயிரம் வீட்டுத்திட்டதில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் அதனை இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஏற்றுக் கொண்டதாகவும் வெளியாகியுள்ள செய்தியில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்
65 ஆயிரம் வீட்டுத்திட்டம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் எம்.பி. முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களில் நியாயங்கள் உள்ளதாகவும் அதனால் வீட்டுத் திட்டம் தொடர்பில்; பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆராய்ந்து வருவதாகவுமே நான் இதன் போது தெரிவித்திருந்தேன்.
ஆனால், ‘குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டார் ஹிஸ்புல்லாஹ்’ என்ற தலைப்பில் அச்செய்தி வெளியாகியிருந்தது. இதனால் சுமந்திரன் முன்வைத்துள்ள அனைத்து குற்றச்சாட்டுக்களையும் நான் ஏற்றுக் கொண்டதாக அது திரிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஆகவே தயவு செய்து பிழையான செய்திகளை வழங்கி மக்களை திசைதிருப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றேன்.
எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்
(புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர்)
Comments
Post a comment