ஏப்ரல் 21 தாக்குதலுக்கு அப்போது ஆட்சியில் இருந்த அரசாங்கமும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுமே பொறுப்புக்கூற வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வலியுறுத்திக் கூறினார். கிராமத்துடன் கலந்துரையாடல் வேலைத்திட்டத்தின் மற்றொரு கட்டம் குருணாகல் – கிரிபாவ, வேரகலவில் இன்று நடைபெற்றது. இதன்போது, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான ஜனாபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஜனாதிபதி கருத்துக் கூறினார். பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படாததால், அவ்வாறான நிலை ஏற்பட்டமை ஆணைக்குழுவின் அறிக்கையில் தௌிவாவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இலங்கையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஐ.எஸ் ஆதரவாளர்கள் இருப்பதுடன், ஐ.எஸ் தெற்காசியாவில் காட்டுத் தீ போல் பரவுவதாகவும் முற்போக்காக இருப்பதை விட செயற்திறன் மிக்கதாக இருக்க வேண்டும் எனவும் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், இன மற்றும் மத முரண்பாட்டை தூண்டுவதனை தடுப்பதற்கு சட்ட வரையறை தயாரிக்கப்பட வேண்டியதன் தேவையும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறினார். எனினும், துரதிர்ஷ்டவசமாக பிரதமர் விக்ரமசிங்க உள்ள
(ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்)
முஸ்லிம் கூட்டமைப்புக்கு முழு ஆதரவு வழங்கப்படுமென முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் செயலாளர் ஹசன் அலி தெரிவித்ததாவது
பல காலமாக இவ்வாறான ஒரு அமைப்பை நான் வலியுறுத்தி வந்துள்ளேன். அந்த அமைப்பை உருவாக்க இது நல்லதோர் காலப்பகுதி. சகல முஸ்லிம் அரசியவாதிகளும், கட்சித் தலைமைகளும் இதில் உச்சக்கட்ட பங்களிப்பை நல்க முன்வர வேண்டும்
இது ஒரு இயல்பு காலம் என சொல்லப்படுகிறது. இந்த இயல்பு காலத்தில் நாம் எமது உரிமைகள் குறித்தும் உரத்துக் குரல் எழுப்ப வேண்டும். இல்லாதவிடத்து நமது உரிமைகள் மழுங்கடிக்கப்படலாம் இந்த நிலையிலிருந்து மீட்சிபெற பலம்வாய்ந்த முஸ்லிம் கூட்டமைப்பு அவசியமாகிறது.
மறைந்த எமது தலைவர் அஸ்ரப் அவர்கள் உயிரோடு இருந்திருந்தால், இவ்வாறான ஒரு அமைப்பை நிச்சயம் வரவேற்றிருப்பார். அவர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவராக இருந்தபோதும், ஏனைய முஸ்லிம் அமைப்புக்களுக்கு தனது ஆதரவை வழங்கினார்.
அந்தவகையில் பலமிக்க முஸ்லிம் கூட்டமைப்பு ஒன்றை முஸ்லிம் காங்கிரஸ் ஆதரிக்கிறது. இதற்கான முயற்சிகளில் பங்கேற்றுள்ள ஊடகவியலாளர்களை வாழ்த்துகிறேன் எனவும் ஹசன் அலி மேலும் தெரிவித்தார்.
Comments
Post a comment