ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு புதிய பதவி நிலைகளை நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் உதவித் தலைவராக ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ் கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே தவிசாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே ஐ.தே.க தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.
முஸ்லிம் சமய கலாச்சார அலுல்கள் திணைக்களத்தின் கிளை காத்தான்குடியில் திறப்பதற்கான நடவடிக்கைக்காக முஸ்லிம் சமய விவகார அமைச்சர் ஏ எச் ஏ ஹலீம் அவர்களுக்கு உலமா கட்சி பாராட்டு தெரிவித்துள்ளது. உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீதினால் அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் இது பற்றி தெரிவித்துள்ளதாவது, முஸ்லிம் சமய கலாச்சார அலுல்கள் திணைக்களத்தின் கிளை ஒன்றை கிழக்கு மாகாணத்தில் திறக்க எடுக்கும் தங்கள் முயற்சிக்கு நாம் எமது பாராட்டு;களை தெரிவித்துக் கொள்கிறோம். மேற்படி கிளை அலுவலகம் கிழக்கு மாகாணத்தில் திறக்கப்படவேண்டும் என்பது கிழக்கு மக்களின் நீண்ட கால தேவையாக உள்ளது. அந்த வகையில் கிழக்கு மாகாணத்தின் மத்தியில் உள்ள ஊர் என்ற வகையில் காத்தான்குடியில் திறக்கப்படுவது பொருத்தமானதாகும். இதற்கான முயற்சிகளை மேற்டிகொள்வதற்காக முஸ்லிம் சகூகத்தின் சார்பில் உலமா கட்சி தனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறது.