ஏப்ரல் 21 தாக்குதலுக்கு அப்போது ஆட்சியில் இருந்த அரசாங்கமும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுமே பொறுப்புக்கூற வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வலியுறுத்திக் கூறினார். கிராமத்துடன் கலந்துரையாடல் வேலைத்திட்டத்தின் மற்றொரு கட்டம் குருணாகல் – கிரிபாவ, வேரகலவில் இன்று நடைபெற்றது. இதன்போது, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான ஜனாபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஜனாதிபதி கருத்துக் கூறினார். பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படாததால், அவ்வாறான நிலை ஏற்பட்டமை ஆணைக்குழுவின் அறிக்கையில் தௌிவாவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இலங்கையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஐ.எஸ் ஆதரவாளர்கள் இருப்பதுடன், ஐ.எஸ் தெற்காசியாவில் காட்டுத் தீ போல் பரவுவதாகவும் முற்போக்காக இருப்பதை விட செயற்திறன் மிக்கதாக இருக்க வேண்டும் எனவும் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், இன மற்றும் மத முரண்பாட்டை தூண்டுவதனை தடுப்பதற்கு சட்ட வரையறை தயாரிக்கப்பட வேண்டியதன் தேவையும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறினார். எனினும், துரதிர்ஷ்டவசமாக பிரதமர் விக்ரமசிங்க உள்ள
முஸ்லிம்களின் உணவை தீர்மானிக்கும், அதிகாரம் எவருக்கும் வழங்கப்படவில்லை - ராஜித ஆவேசம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் முஸ்லிம் மக்களின் சாப்பாட்டு முறைமையைக் கூட பௌத்த தேரர்களே தீர்மானித்தனர்.
அவ்வாறு முஸ்லிம்களின் உணவு விடயங்கள் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் எவருக்கும் தனியாக வழங்கப்படவில்லை என சுகாதாரம் மற்றும் சுதேச வைத்தியதுறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
இதேவேளை, மஹிந்தவின் அவதாரங்கள் குறுக்கிட்டு தடுத்தாலும் நல்லாட்சி அரசாங்கம் சிங்கள மற்றும் தமிழ் முஸ்லிம் மக்களினதும் உரிமைகளை பாதுகாக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பண்டாரகம அட்டுலுகம பகுதியில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த ஜனவரி 8 ஆம் திகதி இடம் பெற்ற புரட்சிக்கு இந்நாட்டு முஸ்லிம் மக்களே பெரும் பங்கு வகித்தனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தான் காற்றில் பறப்பதாக எண்ணிக்கொண்டிருந்தார். ஆனால் நாம் நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தவும பொருளாதார மட்டத்தில் நாட்டு மக்களை வலுப்படுத்தவும் முன்னின்று செயற்பட்டோம்.
அதனால் சகல இனத்தவரும் எம்மை ஆதரித்தனர்.
2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் ராஜபக்ஷ குடும்பத்தினரிடத்தில் ஆட்சி அதிகாரமே இருந்தது. அப்போது நாட்டைக் காப்பாற்றுதல் என்ற பெயரில் ராஜபக்ஷ குடும்பத்தை பாதுகாக்கும் செயற்பாடுகளே முன்னெடுக்கப்பட்டன.
ஆனால் இன்று நல்லாட்சியில் அரச குடும்பங்கள் மாத்திரமன்றி இந்நாட்டுப் பொதுமக்களும் பாதுகாக்கப்படுகின்றனர்.
ஆட்சிமாற்றம் இடம்பெற்றதை தொடர்ந்து முதலில் வெள்ளை வேன் கலாசாரத்திற்கு நாம் முற்றுப்புள்ளி வைத்தோம். மஹிந்தவின் காலத்தில் முஸ்லிம் மக்களின் சாப்பாட்டு முறைமையைக் கூட பௌத்த தேரர்களே தீர்மானித்தனர். அவ்வாறு முஸ்லிம்களின் உணவு விடயங்கள் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் எவருக்கும் தனியாக வழங்கப்படவில்லை.
ராஜபக்ஷக்களை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் அவர்களை ஆட்சி கவிழ்க வேண்டும் என்ற நோக்கம் அன்று முதல் எனக்கு இருந்தது என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆனாலும் ஏனைய மதத்தவரை பழிவாங்கும் நோக்கம் மஹிந்தவிலும் பார்க்க முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபய ராஜபக்ஷவிற்கே அதிகம் இருந்தது.
இதனால் தான் தேசிய ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கப்படுகின்றது என்பதை எம்மால் விளங்கிக்கொள்ள முடிந்தது. அதனால் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான புரட்சியை ஏற்படுத்த திட்டமிட்டோம்.
மஹிந்தவின் தரப்பினர் இன்றும் முன்னைய நிலைப்பாட்டிலேயே உள்ளனர்.
நாம் இன்றும் முஸ்லிம் மக்களை பாதுகாக்க கடமைப்பட்டுள்ளோம். மஹிந்த தரப்பினர் குறுக்கிட்டு முட்டுக்கட்டையிட்டாலும் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் உரிமைகளை நல்லாட்சி அரசாங்கம் பாதுகாக்கும் என்றார்.
Comments
Post a comment