குலோபல் இஸ்லாமிய அமைப்பானது 1975-12- 31 இல் ஓர் இறைக் கொள்கையின் அடிப்படையில் இன மத பேதமின்றி பல்வேறு சமூக செய்திகளை செய்து வருவதோடு இனஒற்றுமையையும் ,
குலோபல் இஸ்லாமிய அமைப்பிற்கு அகில இலங்கை ரீதியாக விண்ணப்பம் கோரல்
குலோபல் இஸ்லாமிய அமைப்பானது 1975-12- 31 இல் ஓர் இறைக் கொள்கையின் அடிப்படையில் இன மத பேதமின்றி பல்வேறு சமூக செய்திகளை செய்து வருவதோடு இனஒற்றுமையையும் ,
முஸ்லிம் காங்கிரசினரால் கல்முனை மாநகரை கட்டி எழுப்ப முடியாது
கல்முனை மாநகர சபையில் ஊழல் என்ற ஆளுந்தரப்பு குற்றச்சாட்டின் மூலம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசினரால் கல்முனை மாநகரை கட்டி எழுப்ப முடியாது என்ற எமது வாதம் உறுதியாகியுள்ளது என
ஜவாதை போன்ற சமூக அக்கறை கொண்டவர்கள் மாகாண சபை தேர்தலில் தோற்ற பின் இவ்வாறு கூறுவதுதான் பரிய கேள்விக்குறி
முஸ்லிம் காங்கிரசின் அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என கூறும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜவாதின் கருத்து பாராட்டுக்குரியதாக இருந்தாலும் இனவாத அரசுக்கு முட்டுக்கொடு:க்கும் அக்கட்சியின் உயர்பீட உறுப்பினர் பதவியைக்கூட இவரால்;
ரிசாத் அணியில் இருந்து அமீர் அலி மீண்டும் முஸ்லிம் காங்கிரஸில் இணைகிறார் -
கிழக்கு மாகாண அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்
தலைவருமான ஹாபீஸ் நசீர் அஹமதும் முன்னாள் அமைச்சுரும் அகில இலங்கை முஸ்லிம்
காங்கிரஸ் தவிசாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான அமீர் அலியும்
ரகசியமாக சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
தேசிய ஷ{றா சபை என்பதெல்லாம் நம்மை நாமே ஏமாற்றி சமூகத்தையும் ஏமாற்றுவதாகும்.
இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகளை தீர்க்க அல்லது சமாளிக்க தேசிய ஷ{றா சபை ஒன்று அவசியம் என்ற கருத்தாடல்கள் அண்மைக்காலமாக எழுதப்பட்டு வருகின்றது. இத்தகைய ஷ{றா சபையில் ஜம்இய்யத்துல் உலமா சபையுடன் முஸ்லிம்களின் பல் துறை சார்ந்த புத்தி ஜீவிகளும் இடம்பெற வேண்டுமென்ற கருத்துக்களும் முன் வைக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய புத்தஜீவிகளைக்கொண்ட ஷ{றா சபையினால் முஸ்லிம் சமூகம் தீர்க்கமான பாதையை நோக்கி பயணிக்குமா என்பது பற்றி நாம் ஆராய்வது அவசியமாகும்.
வடமாகாண தேர்தலை நடத்த விரும்பாத அரசின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கா
முஸ்லிம்களை மீளக்குடியேற்றும் வரை வட மாகாண சபை தேர்தலை நடத்தக்கூடாது என அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கூறுவது முஸ்லிம்கள் மீதான அன்பினால் அல்ல, மாறாக வடமாகாண தேர்தலை நடத்த விரும்பாத அரசின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காகும் என முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில்
இரண்டு நூல்களின் ஆய்வரங்கு
தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் `வைகறை', சுமதி குகதாசனின் 'தளிர்களின் சுமைகள்' ஆகிய இரண்டு நூல்களின் ஆய்வரங்கு கொழும்பு – 06, தர்மாராம வீதி, இலக்கம் 58 இல் அமைந்துள்ள பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன கேட்போர் கூடத்தில் எதிர்வரும் 2013 ஏப்ரல் 28 ஆம் திகதி, ஞாயிற்றுக் கிழமை, மாலை 4.30 மணிக்கு, திரு. வி. கருணைநாதனின் தலைமையில் நடைபெற உள்ளது. சமூக மாற்றத்திற்கான உந்து சக்தியான தியத்தலாவ ரிஸ்னாவின் `வைகறை' சிறுகதைத் தொகுதி பற்றிய ஆய்வை திக்வல்லை கமாலும், சுமதி குகதாசனின் `தளிர்களின் சுமை'களை முன்னிறுத்தி நடைமுறை வாழ்வியலில் இடதுசாரிக் கருத்தியல் பிரயோகம் என்ற தலைப்பில் ஆய்வை லெனின் மதிவானமும் நிகழ்த்த உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை முற்போக்குக் கலை இலக்கிய மன்றம் செய்துள்ளது.
அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கான முபாறக் மௌலவியின் சவாலுக்கு
எஸ். ஹமீத் என்பவர் இணையத்தில் பதில் தந்திருந்தார். அதில் பொது பலசேனாவுக்கும் அரசுக்கும் சம்பந்தம் இல்லை என அ. இ. முஸ்லிம் காங்கிரஸ் கூறவில்லை என சொல்லியிருந்தார்.
பாராளுமன்றத்தில் பதிலளிக்காத அமைச்சர் ரிசாத் பதியுதீன்
எய்தவன் தன்னோடு இருக்க பொதுபலசேனவை மட்டும் கண்டிப்பதன் மூலம் அ. இ. முஸ்லிம் காங்கிரஸ், முஸ்லிம்களை பச்சையாகவே ஏமாற்ற முனைகிறது
முஸ்லிம்களுக்கும் சமமான பங்கு வழங்கப்பட வேண்டும்- முஸ்லிம்களுக்கும் சமமான பங்கு வழங்கப்பட வேண்டும்
வடக்கில்
ஏற்கனவே முஸ்லிம்கள் வாழ்ந்தார்கள்.அவர்கள் வந்தேறு குடிகளல்ல,முஸ்லிம்களை அவர்களது
தாயகத்தில் குடியேறவேண்டாம் என்று கூற எவருக்கும் அனுமதியில்லை என்று வன்னி மாவட்ட
பாராளுமன்ற உறுப்பினரும்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான சட்டத்தரணி
ஹூனைஸ் பாரூக் வழங்கிய செவ்வியின் முழு வடிவத்தையும் இங்கு தருகின்றோம்
“கல்முனை எழுத்தாளர் முன்னணி”
கல்முனை மாநகர எல்லைக்குள் வாழும் தமிழ் பேசும் எழுத்தாளர்கள் அனைவரையும் ஒன்றினைத்து “கல்முனை எழுத்தாளர் முன்னணி” செயற்படவுள்ளது. கல்முனையை சேர்ந்த கவிஞர்கள், கதைஞர்கள்,; கட்டுரைகள், துணுக்குகள் எழுதுவோர், இலக்கிய ஆய்வாளர்கள், ஊடகவியலாளர்கள் என அனைவரையும் உள்வாங்கி அவர்களின் முன்னேற்றத்துக்காகவும், புரிந்துணர்வுகளுக்காகவும் செயற்படவுள்ளது.
இந்த வகையில் கல்முனை மாநகர எல்லைக்குள் வாழும் தமிழ் பேசும் அனைத்து எழுத்தாளர்களும் இணைந்து கொள்ள வேண்டும் என எதிர் பார்க்கப்படுகிறது. முதியோர், இளைஞர் என்ற பாகுபாடின்றி அனைவரும் தமது பெயர், முகவரி, அடையாள அட்டை இலக்கம் என்பனவற்றை செயலாளர் அஷ்ரப்கானின் 0772348508 என்ற இலக்கத்துக்கு எஸ் எம் எஸ் அனுப்பி இணைந்து கொள்ளலாம்.
இலங்கையில் அஹ்ஹைதா இயக்கத்தின் செயற்பாடுகள்

அ. இ. முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களை பச்சையாகவே ஏமாற்ற முனைகிறது
எய்தவன் தன்னோடு இருக்க பொதுபலசேனவை மட்டும் கண்டிப்பதன் மூலம் அ. இ. முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களை பச்சையாகவே ஏமாற்ற முனைகிறது என முஸ்லிம் மக்கள் கட்சி தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
முஸ்லிம் வாக்காளர்கள் தங்களுக்காக யார் உண்மையாக உழைப்பார்கள் குரல் கொடுப்பார்கள் என்று தேர்தல் காலங்களில் சிந்திப்பதில்லை.
வீட்டுக்குள் இருக்கும் தேளை அடித்து விட்டுத்தான் வெளியில் இருக்கும் பாம்பை அடிக்க வேண்டுமென்று சொல்லுவார்கள். ஆதலால் முஸ்லிம்களுக்கு இன்று அந்நிய சக்திகளை விடவும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களே துரோகம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இலங்கை முஸ்லிம் சமூகம் தன்மானம் இழந்து நிர்வாணமாக நிற்கிறது.
பேச வேண்டிய இடமான பாராளுமன்றத்தில் பேசாமல் பதுங்கியிருந்து விட்டு தற்போது பேச வேண்டிய இடத்தில் பேசியதாக சொல்லி அமைச்சர் அதாவுள்ளா சம்மாந்துறை மக்களை ஏமாற்ற முனைந்துள்ளார் என
பொதுபலசேனாவின் கருத்துக்களும் அவர்களின் உள்ளார்ந்தமும் எமக்குத் தெரியாது. அதன் பின்னணியில் யார் இருக்கிறார் என்றும் எமக்குத் தெரியாது. அதாஉல்லா

நாடகம் முடிந்து விட்டது போல் தெரியலாம். ஆனால் - உண்மையில் முடியவில்லை

நாடகம் முடிந்து விட்டது போல் தெரியலாம். ஆனால் - உண்மையில் முடியவில்லை.
மேடையின் திரைச்சீலைகள் விழுகின்றபோது, நாடகம் முடிந்து விட்டதென்று
நினைத்து விடக் கூடாது. அடுத்த காட்சி அரங்கேற்றப்படுவதற்கு முன்பும் -
திரைச் சீலை விழுவதுண்டு. பொதுபலசேனா அமைப்பினரின் கூத்துக்களைத்தான்
நாடகம் என - நாம் இங்கு குறிப்பிடுகின்றோம்.
விக்கிலீக்ஸ் கசிவும், 2002 ஆம் ஆண்டு SLMC - LTTE ஒப்பந்தமும்
(சட்டத்தரணி எம். எம். அபுல் கலாம்)
சில தினங்களுக்கு முன் "ரவூப் ஹக்கீமுக்கு முஸ்லிம்கள் தொடர்பில் எந்த
கவலையும் இல்லைஅவர் தனது பதவியை தக்கவைத்துக்கொள்வது தொடர்பிலேயே
எந்நேரமும் குறியாய் செயற்படுகிறார்" என்ற தலைப்பில் விக்கிலீக்ஸ் தகவலை
வைத்து வெளிவந்த செய்தியுடன் 2002ம் ஆண்டு அரசியல் நிலைமைகளை
நினைவுபடுத்தியபோது 2002ம் ஆண்டு நடந்த பின்வரும் அரசியல் நிகழ்வுகள்
விடயங்கள் அதை மேலும் உறுதிப்படுத்தின
உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு. கவிஞர் தாசிம் அஹமது ஓரங்கட்டப்பட்டவரா ?
உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு சம்பந்தமான நிகழ்வுகளை முன்னெடுப்பதில் கவிஞர் தாசிம் அஹமது அவர்கள் வேண்டுமென்றே ஓரங்கட்டப்பட்டவரா என்பதை மாநாட்டின் தலைவர் என்ற வகையில் அமைச்சர் ரஊப் ஹக்கீம் தெளிவு படுத்த வேண்டும் என முஸ்லிம் மக்கள் கட்சியின் தலைவரும் உலக இலக்கிய மாநாட்டின் மீடியா குழுவின் உறுப்பினருமான முபாறக் அப்துல் மஜீத் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் இது விடயமாக கூறியள்ளதாவது,
நன்றி தெரிவிக்கும் பிரேரணை
இலங்கை முஸ்லிம்கள் சமகாலத்தில் அனுபவிக்கும் துன்பங்களுக்கெதிராகவும் இலங்கை முஸ்லிம்களுக்கு ஆதரவாகவும் செயற்பட்ட பொப்புலர் பிரண்ட ஒப் இந்தியா, மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் உட்பட இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் திரு. சம்பந்தன் அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் பிரேரணையை ஸ்ரீலங்கா முஸ்லிம் மக்கள் கட்சி நிறைவேற்றியுள்ளது.
ரவூப் ஹக்கீமுக்கு முஸ்லிம்கள் தொடர்பில் எந்த கவலையும் இல்லை
2002 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் திகதி அப்போதைய இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்ஆஸ்லே வில்ஸ் அமெரிக்க ராஜாங்க திணைக்களத்துடன் பகிர்ந்து கொண்ட தகவல்களின் வடிவத்தை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.
பொப்புலர் பிரண்ட ஒப் இந்தியா, மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் உட்பட இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் திரு. சம்பந்தன் அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் பிரேரணை
இலங்கை முஸ்லிம்கள் சமகாலத்தில் அனுபவிக்கும் துன்பங்களுக்கெதிராகவும் இலங்கை முஸ்லிம்களுக்கு ஆதரவாகவும் செயற்பட்ட பொப்புலர் பிரண்ட ஒப் இந்தியா, மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் உட்பட இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் திரு. சம்பந்தன் அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் பிரேரணையை ஸ்ரீலங்கா முஸ்லிம் மக்கள் கட்சி நிறைவேற்றியுள்ளது.
அமைச்சர்கள் ராஜினாமா செய்வதன் மூலமே முஸ்லிம்களின் தன்மானத்தை காக்க முடியும்
ஒரு காலத்தில் முஸ்லிம்கள் எதிர் நோக்கிய பிரச்சினைகளின் போது அன்றைய முஸ்லிம் அமைச்சர்கள் ராஜினாமா செய்வதன் மூலமே முஸ்லிம்களின் தன்மானத்தை காக்க முடியும் என கூறிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசினர்
இஸ்ரவேலில் அனோனிமோஸ் சைபர் தாக்குதல்.
இஸ்ரவேலில் அனோனிமோஸ் சைபர் தாக்குதல்.
40.000 பேஸ்புக் எகவுன்ட், 30.000 பேங்க் கணக்ககள் நாசம்.
3 பில்லியன் நஷ்டம்.
முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்களின் காணி வழங்கல் பிரச்சினை
முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்களின் காணி வழங்கல் பிரச்சினை நியாயமாக தீர்த்து வைக்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
முஸ்லிம் தலைவர்கள் பேசாமலிருந்தாலே இந்தப் பிரச்சினை தீர்ந்துவிடும்
சிங்கள மக்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும் இடையில் முரண்பாடு என்பதைவிட, சிங்கள பௌத்தத்திற்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான முரண்பாடு என்பதே பொருத்தமானது. இதற்கு தீர்வு என்னவென்றால் மதவாதிகளாகவும்,
தவ்ஹீத் ஜமாத்தின் கொம்பனி தெரு பொதுக் கூட்டம் தடையானது ஏன்?
தவ்ஹீத் ஜமாத்தின் கொம்பனி தெரு பொதுக் கூட்டம் தடையானது ஏன்?
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக (06.04.2013) கொழும்பு கொம்பனி தெருவில் நடத்தப்படவிருந்த மாபெரும் விளக்கப் பொதுக் கூட்டம் அரசினால் தடை செய்யப்பட்டு இறுதியில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் தலைமையகத்தில் நடைபெற்றது.
அமைச்சரவை கூட்டம் இன்று
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று வியாழக்கிழமை அலரி மாளிகையில் நடைபெற்றுள்ளது.
பாராளுமன்றத்தில் தூக்க மாத்திரை வெளியே பயில்வான் லேகியம்
பாராளுமன்றத்தில் தூக்க மாத்திரை சாப்பிட்டவர்கள் போன்று இருந்து விட்டு பாராளுமன்றத்துக்கு வெளியே மக்கள் மத்தியில் பயில்வான் லேகியம் சாப்பிட்டவர்கள் போன்று வீரம் பேசுகிறார்கள்;
இலங்கையில் முஸ்லிம்கள் தாக்கப்படுவதை கண்டித்து இந்தியாவில் ஆர்ப்பாட்டம்
முஸ்லிம்களை துடைத்தெறிய வேண்டும் எனும் நோக்கில் தொடர்ச்சியாக பல்வேறு அநியாயங்களை செய்து வரும் பௌத்த பயங்கரவாதிகளையும், இன அழிப்பில் ஈடுபட்டுள்ள சிங்கள அரசாங்கத்தையும் வன்மையாக கண்டிப்பதோடு மத்திய அரசு உடனே தலையிட்டு முஸ்லிம்களுக்கெதிரான தாக்குதலை தடுத்து நிறுத்த இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதற்காக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்திய லயோலா கல்லூரி எதிரில் அமைந்துள்ள இலங்கை தூதரகம் முன்பு, இன்று திங்கட்கிழமை (01.04.2013) மாலை 4.00 மணியளவில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடாத்தியுள்ளது.
பொத்துவில் முகுந்து மகா விகாரையில் இன்று அதிகாலை தீ
பொத்துவில் முகுந்து மகா விகாரையில் இன்று அதிகாலை தீ ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.
இத் தீயினால் சுமார் பத்து இலட்ச ரூபா பெறுமதியுள்ள பொருட்களும் முக்கிய ஆவணங்கள் தஸ்தாஜூவேக்கள் என்பன கருகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மின் ஒழுக்கு காரணமாக இத் தீ ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடாபாக பொத்துவில் பொலீஸில் முறைப் பாடு செய்யப்பட்டுள்ளது.
'பர்தா தான் தமது அடுத்த இலக்கு?
'பர்தா தான் தமது அடுத்த இலக்கு' என பொது பல சேனா அறிவித்து இருப்பதாக பரவலாக இணையதளங்களில் காணக்கூடியதாக இருந்தது. ஆனால் அது தவறான செய்தியென அவ்வமைப்பின் நிறைவேற்றுக்குழு அங்கத்தவர் டாக்டர்.டிலாந்த விதானகே தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Posts
(
Atom
)